ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை 19ஆம் தேதி பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை வரும் 19ஆம் தேதி பிரதமர் பார்வையிட உள்ளார்.
டெல்லி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்டது. கரையை கூட கடக்காமல் கடலில் இருந்தபடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் கோரதாண்டவமாடியது ஓகி புயல்.
இதனால் மீனவர்கள், விவாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏராளமான மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன.

433 மீனவர்கள் மாயம்
புயலுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஓகி புயலால் 433 மீனவர்கள் மாயமாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2 பேர் உயிரிழப்பு
மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை 2 மீனவர்கள் மட்டுமே இறந்துள்ளதாக அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். ஆனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அங்கு கரை சேர்க்க முடியாத நிலையில் உடல்கள் மிதப்பதாக கூறி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் ஆய்வு
காணாமல்போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரியும் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரியும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட்டனர்.

19ஆம் தேதி வருகிறார் பிரதமர்
இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பிரதமர் மோடி பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட உள்ளார்.

நேரில் ஆய்வு செல்லவுள்ளார்
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தெற்கு கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை பிரதமர் மோடி பார்வையிடவுள்ளார். தூத்தூர், சின்னதுறை பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களை சந்திக்கிறார்?
மேலும் தக்களையில் மக்களை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிதரமர் வருகையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் உறுதி செய்துள்ளார்.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல்












Click it and Unblock the Notifications