பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம்... மம்தா கோட்டையான மேற்கு வங்கம் செல்கிறார்
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
கொல்கத்தாவில் துர்காபுர் டவுன் மற்றும் தாக்கூர் நகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டங்களில் மோடி உரையாற்ற உள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புக்கு ஆளான குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பிரதமர் விளக்கமளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மோடியின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மாத்துவா இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும்.மேற்கு வங்கத்தில் மாத்துவா இனத்தவர் 30 லட்சம் பேர் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் அளிக்கும் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
முன்னதாக, இடைக்கால பட்ஜெட்டுக்கு நிதி எங்கே கிடைக்குமா?; நோயாளி இறந்தபிறகு மருந்து போடலாமா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications