அற்புதமான ஆண்டாக அமைய வேண்டும்... பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து
டெல்லி: புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் 2014ம் ஆண்டுக்கு விடை கொடுத்து, 2015ம் ஆண்டை நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளனர். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மோடி தனது டுவிட்டர் செய்தியில், ‘2015ம் ஆண்டு உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் அற்புதமான ஆண்டாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு பெரும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளர்ச்சியை அனைவரின் வாழ்விழும் கொண்டு வர வேண்டும்.' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை மோடி பரிமாறிக் கொண்டார். மக்களையும் நேரடியாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.