காங்கிரஸ் மோசமான கட்சி; கொள்கையை மறந்து யாருடனும் கூட்டணி வைப்பாங்க... போட்டு விளாசிய மோடி!
குவஹாத்தி: காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாகிவிட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் எந்த கொள்கையும் இன்றி எந்த கட்சிகளுடனும் கைகோர்க்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, தொடர்ச்சியான வளர்ச்சி, அனைவரின் வளர்ச்சி. இது பாஜக ஆட்சியில் தொடரும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

அசாம் மாநில தேர்தல்
அசாம் மாநிலத்தில் முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அசாமில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்த முறை அசாமில் காலூன்ற வேண்டும் என காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இதனால் பாஜக-காங்கிரஸ் தலைவர்கள் அசாமில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் பலவீனமான கட்சி
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அசாமின் கரிம்கஞ்சில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரசை கடுமையாக தாக்கி பேசினார். பிரதமர் மோடி கூறியதாவது:- தேர்தல் நடக்கும் மாநிலங்களில் காங்கிரஸின் கூட்டணிகளை நாம் பார்த்தோமானால், காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாகிவிட்டது என்று தெரிய வரும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் எந்த கொள்கையும் இன்றி எந்த கட்சிகளுடனும் கைகோர்க்கும்.

அசாமை சேதப்படுத்திய காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் கேரளாவில் அதே கட்சிக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிடுகிறது. இவ்வாறு நிலையான சிந்தனை இல்லாத ஒரு கட்சியால், அசாமுக்கு ஒரு நிலையான அரசாங்கத்தை எப்படி வழங்க முடியும்? காங்கிரஸ் அரசும், அவற்றின் கொள்கைகளும் சமூக, கலாச்சார, புவியியல் மற்றும் அரசியல் ரீதியாக அசாமை சேதப்படுத்தின. 2016 ஆம் ஆண்டில், நான் இங்கு வந்தபோது, குவஹாத்தியில் இருந்து பராக் பள்ளத்தாக்கிற்கான பிரதேச ஆணையாளரை காங்கிரஸ் அரசு நடத்தியது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த அநீதியை தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி உடைத்துள்ளது.

பாஜக வளர்ச்சியை தக்க வைக்கும்
காங்கிரஸின் ஊழல் மற்றும் வாக்கு வங்கி அடிப்படையிலான ஆளுகை அசாமை இந்தியாவில் மிகவும் துண்டிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ஆக்கியது. இன்று அசாமில் வளர்ச்சி அலை, நம்பிக்கை அலை உள்ளது. அசாமில் தற்போது அமைதி பற்றிய நம்பிக்கை உள்ளது, செழிப்பு பற்றிய நம்பிக்கை உள்ளது. அசாமில் ஒரே ஒரு பிரச்சினை உள்ளது. வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, தொடர்ச்சியான வளர்ச்சி, அனைவரின் வளர்ச்சி. இது பாஜக ஆட்சியில் தொடரும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications