சியாச்சின் போர்முனை பகுதியை ஆக.12-ல் பார்வையிடுகிறார் மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ந் தேதி சியாச்சின் போர்முனை பகுதிக்கு செல்ல இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிக உயரமான போர்முனைப் பகுதி சியாச்சின் பனிமலை முகடு. இமயமலையின் ஹாரோகாம் மலைத் தொடரில் உள்ள சியாச்சின் பனிமுனையில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் முகாமிட்டு எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1984ஆம் ஆண்டு முதல்தான் சியாச்சின் ஒரு போர்முனைப் பகுதியாக உருவெடுத்தது. அங்கு 2003ஆம் ஆண்டு முதல் யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Prime Minister Narendra Modi to Visit Siachen on August 12

இப்பகுதியை கடந்த 2005ஆம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் பார்வையிட்டார். கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னர் சியாச்சின் பனிமுனைக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி.

வரும் ஆகஸ்ட் 12-ந் தேதியன்று சியாச்சின் பகுதியை பிரதமர் மோடி பார்வையிட இருப்பதாக கூறப்படுகிறது. சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களை நிறுத்தி வைப்பது மிகப் பெரிய செலவை ஏற்படுத்துகிறது என்பதால் இருநாடுகளும் தங்களது வீரர்களை அங்கிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது நீண்டகால கருத்தாக இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+