Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடம்- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

டோக்கியா: ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அருங்காட்சியகத்தில் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார். அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடத்திலும் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் உட்பட தங்களின் விரிவான உத்திகள் வகுத்தல் மற்றும் பங்களிப்பை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

Prime Minister Narendra Modi visits the Hiroshima Peace Memorial Museum

வர்த்தகம் & முதலீடு, அறிவியல் & தொழில்நுட்பம், உயர்கல்வி, மக்களிடையேயான உறவு போன்ற விரிவான பகுதிகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இந்தத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவின் தற்போதைய ஜி20 தலைமைத்துவமும் இந்த விவாதங்களில் இடம்பெற்றன. டெல்லியில் ஜி20 உச்சிமாநாட்டிற்கு சுனக்கை வரவேற்பதைப் பிரதமர் மோடி எதிர்நோக்கியுள்ளார்.

Prime Minister Narendra Modi visits the Hiroshima Peace Memorial Museum

மேலும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இரு தலைவர்கள் இடையேயான முதல் சந்திப்பாக இது இருந்தது. தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 75வது ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். உத்திகள் வகுத்தலில், குறிப்பாக பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி, வர்த்தகம், மருந்துகள் உற்பத்தி, வேளாண்மை, பால்வளம் & கால்நடை பராமரிப்பு, உயிரி-எரிபொருள் & தூய்மை எரிசக்தி பற்றி ஆய்வுசெய்த அவர்கள், அதனை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் விவாதித்தனர். இரு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்களின் உயர்நிலைக் கூட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். பிராந்திய வளர்ச்சி குறித்தும் இரு தலைவர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர். பன்னாட்டு அமைப்புகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை, பன்னாட்டு அமைப்புகளில் நீடிக்கும் சீர்திருத்தத்தின் அவசியத்தையும் இவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆண்டு செப்டம்பரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்காக அதிபர் லூலாவை இந்தியாவில் வரவேற்க பிரதமர் எதிர்நோக்கி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+