For Quick Alerts
For Daily Alerts
Just In
“நான் ஜெயிலை விட்டு போமாத்தேன்”- தண்ணீர் தொட்டி மேல் ஏறி அடம் பிடித்த கைதி
உத்தரகண்ட்:சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கைதி ஒருவர் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டம் செய்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற கைதி ஒருவன் பெரேலி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது சிறை வாசம் முடிவடைந்ததால் சிறையிலிருந்து அவன் விடுவிக்கப்பட்டான்.
அவ்வாறு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அந்த கைதி சிறையில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி போராட்டம் நடத்தி சிறை அதிகாரிகளை டென்ஷன் படுத்தினார்.
தன்னால் கொல்லப்பட்டவர்களின் தரப்பினர் தன்னை கொல்ல முயற்சிக்கலாம் என்ற பயத்தின் காரணமாக அவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கருத்து தெரிவித்தனர்.
மேலும் சிறையிலிருப்பது தான் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் கருதுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Prisoner doesn't want to release from jail. So, He climbed on a water tank and struggled for return to prison.
Story first published: Saturday, May 10, 2014, 11:22 [IST]