சட்டத்திற்கு உட்பட்டதுதான் தனிமனித சுதந்திரம்... ஆதார் வழக்கில் மத்திய அரசு பதில்
இந்தியாவில் தனிமனித சுதந்திரம் என்பது , சட்டத்துக்கு உட்பட்ட ஒன்றுதான் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
டெல்லி: ஆதார் கட்டாயம் என்பது தொடர்பான வழக்கில், தனிமனித சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டது தான் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
ஆதார் கட்டாயம் என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதில் இன்று பதிலளித்த மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், "தனிமனித சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே ஆகும். அது அடிப்படை உரிமையாக அனுபவிக்க முடியாது" என்று வாதிட்டுள்ளார்.

எல்லாவற்றுக்கும் ஆதார் முக்கியம் என்ற நிலை இந்தியா முழுக்க இருக்கிறது. அரசின் திட்டங்களின் பயனைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அட்டை தேவை என்றே அரசு கூறுகிறது.
இந்த நிலையில், ஆதார் கார்டு கட்டாயம் என்பது நாட்டில் பெரிய அளவுக்கு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிமனித உரிமை என்ற அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இதில், மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களில் தனிநபர்களின் சுய விவரங்கள், தகவல்களை சேகரிப்பதன் மூலம் தனிமனித ரகசியத்துக்கான உரிமை பறிக்கப்பட்டு தனிமனித சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் அரசியல் சாசனம் தனிமனித சுதந்திரம், தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் வாதங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, உச்சநீதிமன்றத்தில், கடந்த ஒருவாரமாக விசாரணை நடந்து வருகிறது.
இதில் இன்று பதில் வாதம் செய்த மத்திய அரசின், அட்டர்னி ஜெனரல், " தனிமனித சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே ஆகும். அது அடிப்படை உரிமையாக அனுபவிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications