மோடியை எதிர்த்து போட்டியில்லை.. ராகுல் தேர்தலில் நிற்க வலியுறுத்துகிறார்: பிரியங்கா
அமேதி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் தாம் தேர்தலில் போட்டியிடவில்லை.. ஆனால் சகோதரர் ராகுல் லோக்சபா தேர்தலில் போட்டியிட வலியுறுத்துகிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
சோனியா மற்றும் ராகுல் போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் மட்டும் நான் கவனம் செலுத்துகிறேன்:
நான் தேர்தலில் போட்டியிடும் முடிவெடுத்தால் அதை என் குடும்பத்தினர் ஒருவருமே தடுக்கமாட்டார்கள். என்னை ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்பதென்னவோ உண்மைதான்..
இவ்வாறு பிரியங்கா பேட்டியில் தெரிவித்துள்ளார்.