மோடி புகாருக்கு பிரியங்கா பதிலடி.. "அவர் என்ன ஜாதி என்று எனக்கு இதுவரை தெரியாது"
பிரதமர் மோடி சாதி என்னவென்று எனக்கு தெரியாது என்று பிரியங்கா கூறியுள்ளார்.
Recommended Video
அமேதி: "நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன், ஆனா காங்கிரஸ்தான் என்னை சாதி அரசியலுக்கு இழுக்கிறது" என்று பிரதமர் மோடி சொல்ல, "எனக்கு இப்போ வரைக்கும் மோடி எந்த ஜாதியை சேர்ந்தவர் என்றுகூட தெரியாது" என்று பிரியங்கா காந்தி அதற்கு பதிலடி தந்துள்ளார்.
வாரணாசி தொகுதியில் மீண்டும் மோடி போட்டியிடுகிறார். அதற்காக கன்னோஜ் நகரில் பிரதமர் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியபோது, "பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி என் ஜாதிச் சான்றிதழை ஜெராக்ஸ் எடுத்து எல்லாருக்கும் தந்துட்டு வர்றார். ஆனால் நான் குஜராத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன்.
துரைமுருகன் எப்போதும் கனவு உலகத்திலேயே இருப்பார்... ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம்
ஜாதி அரசியல்
இப்போது அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் கட்சியும் கூட என் ஜாதியை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். நான் இதுவரை ஜாதி அரசியல் செய்தது கிடையாது. ஆனால் நான் அவர்களிடம் கேட்பதெல்லாம், தயவு செய்து என்னை ஜாதி அரசியலுக்கு இழுக்காதீர்கள்" என்றார்.
சாதி தெரியாது
இந்நிலையில், அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்காவிடம் மோடி சொன்ன கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பிரியங்கா, "எனக்கு இப்போ வரைக்கும் மோடி எந்த ஜாதியை சேர்ந்தவர் என்றுகூட தெரியாது.
குழந்தைகள் நலன்
வெறும் பிரச்சினைகளை குறித்து கேள்வி எழுப்பித்தான் பிரச்சாரம் செய்துக்கிட்டு இருக்கோம். நாட்டில் வேலையின்மை, கல்வி, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் இப்படித்தான் குறிப்பிட்டு நாங்கள் பேசுகிறோமே தவிர, ஜாதியை சொல்லி எங்கேயுமே பேசவில்லை.
ஷூக்கள் தரலாமா?
பாஜகதான் தேசியவாதத்தை ஆயுதமாக எடுத்துப் பேசி வருகிறது. மக்கள் பிரச்சனையை காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. இதுக்கு பெயர் தேசியவாதம் இல்லை. ஸ்மிருதி இராணி, இந்த தொகுதி மக்களுக்கு ஷூக்களை வழங்கி அவமானப்படுத்துகிறார்.
முறையா?
இதுதான் தேர்தலில் போட்டியிடும் முறையா? எனக்கு 12 வயசாக இருக்கும்போதில் இருந்தே இங்க நான் வந்து கொண்டிருக்கிறேன். அமேதி மக்கள் சுயமரியாதை நிரம்பியவர்கள். யார்கிட்டயும் பிச்சை கேட்க மாட்டாங்க" என்றார்.