பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராகுல் காந்தி
டெல்லி: தனது சகோதரி பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வாத்ரா கடந்த வாரம் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்றும், தீவிர அரசியலில் குதிக்கப் போகிறார் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்,
பிரியங்கா என் சகோதரி, என் தோழி. அவர் காங்கிரஸ் கட்சிக்காக உழைப்பவர். அதனால் அவர் கட்சி மற்றும் என்னை பலப்படுத்த உதவி செய்கிறார். அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றார்.

காங்கிரஸ் தலைவர் அஜய் மகேன் கூறுகையில்,
பிரியங்கா அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் எப்பொழுதும்போல் பிரச்சாரம் செய்வார். சோனியா மற்றும் ராகுல் அரசியலுக்கு வந்ததில் இருந்து அவர் அந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications