For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாம்பா.. பயமா... எனக்கா... பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி செம

Google Oneindia Tamil News

Recommended Video

    Priyanka Gandhi Playing with Snake: பாம்பை கையில் தூக்கி விளையாடினார் பிரியங்கா காந்தி- வீடியோ

    ரேபரேலி: பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால், பாம்பை கண்டு சற்றும் பயமில்லாமல் அசால்ட்டாக கையில் தூக்கி விளையாடினார் பிரியங்கா காந்தி.

    ரேபரேலியில் போட்டியிடும், தனது தாய் சோனியா காந்திகாக, உத்தரப்பிரதேசத்தில் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    5 ம் கட்டமாக வருகிற 6 மேதி உத்தரபிரதேச மாநிலம் தவுராஹ்ரா, சித்தாபூர், மோகன்லல்கன்ஜ், லக்னோ, ரேபரேலி, அமேதி, பைசாபாத், பஹ்ராய்ச், கைசர்கன்ஜ், உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

    ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை உள்ளதா? களமிறங்கும் உச்ச நீதிமன்றம்.. அடுத்த வாரம் விசாரணை! ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை உள்ளதா? களமிறங்கும் உச்ச நீதிமன்றம்.. அடுத்த வாரம் விசாரணை!

    பாம்புகளுடன் விளையாட்டு

    பாம்புகளுடன் விளையாட்டு

    இதனையொட்டி, ரேபரேலி தொகுதியில் இன்று பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரியங்கா காந்தி, பாம்பாட்டிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, படமெடுத்து ஆடிய பாம்புகளை அசால்ட்டாக கையில் தூக்கி விளையாடும் அந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வாய் தைத்த பாம்பாக இருந்தாலும், பிரியங்கா காந்தி சற்றும் பயமில்லாமல் இருந்தது அங்கிருந்தவர்களை வியப்படைய செய்தது.

    இருவேறு துருவங்கள்

    இந்தநிலையில், பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது: காங்கிரஸ் - பாரதீய ஜனதா கட்சி இருவேறு துருவங்கள். நாங்கள் எப்போதும் அவர்களை எதிர்த்து போராடுவோம், அவர்கள் அரசியலில் முக்கிய எதிரி. எந்த விதத்திலும் பாஜக பயனடையும் வகையில் செயல்படமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். நாங்கள் கடுமையாக போராடுகிறோம், எங்கள் வேட்பாளர்கள் வலுவாக உள்ளனர் என கூறினார்.

    பா.ஜ.க விரும்புகிறது

    பா.ஜ.க விரும்புகிறது

    உண்மையான பிரச்சினையிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப, கட்டுக்கதைகளை உருவாக்க பா.ஜ.க விரும்புகிறது என்றும் பிரியங்கா காந்தி பேசினார். முன்னதாக, மக்களின் பிரச்சனைகளை பாஜக அரசு கேட்கவில்லை, அவர்கள் தங்களது பிரச்சினை குறித்து குரல் கொடுத்தால், ஒடுக்கப்படுகிறார்கள். இது ஜனநாயகமா எனவும் கேள்வி எழுப்பினார்.

    பா.ஜ.க விரும்புகிறது

    பா.ஜ.க விரும்புகிறது

    உண்மையான பிரச்சினையிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப, கட்டுக்கதைகளை உருவாக்க பா.ஜ.க விரும்புகிறது என்றும் பிரியங்கா காந்தி பேசினார். முன்னதாக, மக்களின் பிரச்சனைகளை பாஜக அரசு கேட்கவில்லை, அவர்கள் தங்களது பிரச்சினை குறித்து குரல் கொடுத்தால், ஒடுக்கப்படுகிறார்கள். இது ஜனநாயகமா எனவும் கேள்வி எழுப்பினார்.

    English summary
    Priyanka Gandhi Vadra, Congress General Secretary for Uttar Pradesh (East) meets snake charmers in Raebareli, holds snakes in hands.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X