கேப்பே விடாமல் கன்னட விவசாயிகள் போராட்டம்- தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு!
மண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகா விவசாயிகள் இன்று மண்டியாவில் போராட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடகா, காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடிநீரைத் திறந்துவிட வேண்டும். ஏறனவே காவிரி மேலாண்மை ஆணையமும் 2 முறை இது தொடர்பாக உத்தரவிட்டிருந்தது. காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதற்கு எதிராக கன்னட விவசாயிகள், பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தொடர் போராட்டங்கள் நடத்தின. மண்டியா மாவட்டத்தில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூரில் நேற்று பாஜக தலைவர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து வரும் 26-ந் தேதி பெங்களுரில் பந்த் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு 100க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள், சங்கங்கள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெங்களூரில் செப்டம்பர் 26-ந் தேதி பிரம்மாண்ட பேரணிக்கும் விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்பின் வாட்டாள் நாகராஜ் பேசி வருகிறார். இதனால் பெங்களூரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே போராட்டங்களை வன்முறையில்லாமல் அமைதியாக நடத்துங்கள்; வன்முறைகள் நிகழ்ந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒதுங்கி நிற்கிறது. காவிரியில் நீர் திறக்காமல் விட்டால் முன்பு ராணுவத்தை கர்நாடகாவுக்கு அனுப்பியதைப் போன்ற நிலைமை உருவாகும் எனவும் கர்நாடகா காங்கிரஸ் அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
ஆனால் கர்நாடகா காங்கிரஸ் அரசு, திமுகவுடனான கூட்டணிக்காக காவிரி நீரை திறந்துவிட்டுவிட்டது. இது கன்னட விவசாயிகளுக்கு செய்யும் பெரும் துரோகம் என பாஜக, மதச்சார்பற்ற கட்சிகள் விமர்சிக்கின்றன.
இந்நிலையில் இன்றும் மண்டியா மாவட்டத்தில் கன்னட் விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். கர்நாடகா , தமிழ்நாடு அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications