புனே நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு! மேலும் 130 பேரின் கதி என்ன?
மும்பை: புனே அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே மேலும் 130 பேர் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஆம்பே அருகே மாலின் என்ற மலையடிவார கிராமத்தில் கன மழை காரணமாக கடந்த புதன்கிழமை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தை சேர்ந்த 44 வீடுகளும், ஒரு கோவிலும் முற்றிலுமாக மண்ணில் புதைந்தன.

ஒட்டுமொத்தமாக அந்த கிராமமே இயற்கையின் சீற்றத்தில் சிக்கி புதையுண்டது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர்.
அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழையை பொருட்படுத்தாமல் மீட்பு பணி இரவு- பகலாக நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 378 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் தீயணைப்பு படை வீரர்கள், சுற்றுவட்டார கிராம மக்களும் மீட்பு பணியில் தீவிரம் காட்டி உள்ளனர்.
மொத்தம் இதுவரை 73 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 மாத கைக்குழந்தை உட்பட 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நிலச்சரிவு நடந்த இடத்தில் யாராவது மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறார்களா? என்பதை அறிய பேரிடர் மீட்பு படையினர் 2 நவீன கருவிகளை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட 6 மோப்ப நாய்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
ஆனால், உயிருடன் மீட்கப்பட்ட 9 பேரை தவிர வேறுயாரும் மண்ணுக்குள் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர்கள் உயிருடன் சமாதி ஆகி இருக்கலாம் என்று தெரியவந்து இருப்பதாக மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.
இதனால் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் மற்ற அனைவரும் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் 130 பேர் வரை மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் மீட்பு பணியின் போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications