தாயை கொன்று சடலத்துடன் உறவு வைத்த கொடூர மகன் கைது!
புனே: 60 வயது தாயை கொலை செய்து சடலத்துடன் உறவு வைத்த 35 வயது காமக்கொடூரனை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம், புனே நகரின் வகாட் பகுதியில் வசித்து வந்தவர் சந்தீப் ஜாவத் (35). குடிக்கு அடிமையான திருமணமாகாத, சந்தீப், அவரது தாய் ஜாலன் (60) உடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
சிறிது தூரத்திலுள்ள வீட்டில் அவரது அண்ணன் பிரவீன் ஜாதவ், குடும்பத்தோடு வசித்து வருகிறார். சம்பவத்தன்று, பிரவீன் ஜாதவ் மகன், தனது பாட்டியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளான். ஆனால் படுக்கையறையில், அந்த பெண்மணி, பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளார். தட்டிப்பார்த்தும், அவர் எழுந்திருக்காததால், சந்தேகமடைந்த சிறுவன் தனது தந்தையிடம் தகவலை கூறியுள்ளான்.
இதையடுத்து பிரவீன் ஜாதவ், தாய் வீட்டுக்கு சென்று பார்த்தபோதுதான், அவர் இறந்திருப்பது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது பெண்மணி உடலில் காயங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே சந்தீப் ஜாதவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தலையணையை வைத்து முகத்தை அழுத்தி கொலை செய்ததாகவும், கொலை செய்த பிறகு சடலத்தோடு உறவு கொண்டதாகவும் சந்தீப் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரவீன் கூறுகையில், எனது தம்பி குடிக்கு அடிமையாகி, வீட்டில் எப்போது பார்த்தாலும் தகராறு செய்துகொண்டிருப்பான். எனவேதான், நான் மனைவி, பிள்ளையுடன் வேறு வீட்டுக்கு சென்றேன். ஆனால் தாயையும் என்னுடன் அழைத்துச் செல்லாமல் தவறு செய்துவிட்டேன்.
குடித்துவிட்டு வந்து எனது தாயை ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக நிற்கச்சொல்லி சந்தீப் கொடுமைப்படுத்தியுள்ளான். உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்துவான். பலமுறை நான் கண்டித்து விரட்டியுள்ளேன். எனவேதான், கொலை செய்து உறவு வைத்துள்ளான். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
சந்தீப் ஜாதவ், குடி அதிகமாக மனநிலை பிழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மருத்துவர் குழு பரிசோதனை செய்துள்ளது.