போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு எதிரொலி – பஞ்சாப் அமைச்சர் ராஜினாமா
சண்டிகர்: போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியதால் பஞ்சாப் கலாசாரத்துறை அமைச்சரான சர்வான் சிங் பில்லார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் சிறை, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சரான சர்வான் சிங் பில்லார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவரது குடும்ப உறுப்பினர் மீது போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி விலக முன் வந்ததாக கூறப்பட்டது.
தனது ராஜினாமாவை முதல்வர் பிரகாஷ் சிங் பாதலிடம் சமர்ப்பித்த பில்லார், உண்மைக்கு மாறான செய்தியை ஊடகங்கள் வெளியிட்டாலும் கூட, தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
தங்கள் கட்சியின் மதிப்புக்கு களங்கம் வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே தான் இம்முடிவை எடுத்ததாகவும் பில்லார் கூறினார். தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று தெரிவித்துள்ள அவர், அதில் ஒரு போதும் ஒளிவு மறைவுகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications