தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது செருப்பு வீச்சு.. இளைஞர் கைது
தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது இளைஞர் ஒருவர் காலணி வீசியதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. உடனடியாக அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 4-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.

இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைப்பதற்காக அகாலி தளம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று முக்த்சர் மாவட்டம் லாம்பியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது காலணியை கழற்றி முதல்வரை நோக்கி வீசினார். அந்த காலணி முதல்வர் மீது விழுந்தது. இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த முதல்வர் பாதல் அங்கிருந்து வெளியேறினார். அவர் மீது காலணியை வீசிய நபரை உடனடியாக போலீசார் கைது செய்துதனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications