பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்த 'கை'.. ஆம் ஆத்மி எதிர்கட்சி - பாஜகவிற்கு வெறும் 3 சீட்
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கனியை பறித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வென்று இரண்டாம் இடத்தை பிடித்து எதிர்கட்சி அந்தஸ்த்தை பெற்றுள்ளது. ஆளும் சிரோமணி அகாலிதளம் படு பயங்கர தோல்வியுடன் 3வது இடத்திற்கு விரட்டப்பட்டுள்ளது. இதில் பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிரோமணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 23 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆளும் கட்சி மீது மக்களுக்கு இருந்த கோபம் இந்த தேர்தலில் எதிரொலித்தது. சிரோமணி அகாலிதளம் கூட்டணி மரணஅடி வாங்கியதோடு 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது எதிர்பார்த்த தோல்விதான்.

காங்கிரஸ் கட்சி
எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் 117 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அம்ரிந்தர் சிங் தலைமையில் தேர்தலை சந்தித்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தது. நேரம் செல்லச்செல்ல வெற்றி உறுதியானது.

படுபயங்கர வெற்றி
77 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கிறது. முதல்வர் வேட்பாளர் அம்ரிந்தர் சிங்கிற்கு இது பிறந்தநாள் பரிசாக கிடைத்துள்ளது. இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றன.

ஆம் ஆத்மி கட்சி
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களம் காணும் ஆம் ஆத்மி 112 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. இந்த கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடித்து எதிர்கட்சி வரிசையில் அமர உள்ளது.

சிரோமணி அகாலிதளம் - பாஜக
பஞ்சாபை ஆளும் சிரோமணி அகாலிதளம் பாஜக கூட்டணி 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஆளும் கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்திக்கும் என்று கூறப்பட்டது சொன்னது போலவே ஆளுங்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பாஜகவிற்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

வெற்றிக்கனி
மும்முனை போட்டி நிலவிய பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியுடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால் அந்த கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் அம்ரிந்தர் சிங்கிற்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசை கொடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications