For Daily Alerts
Just In
லூதியானா கம்பளி தொழிற்சாலையில் தீவிபத்து – 3 பேர் உடல் கருகி பரிதாப பலி!
லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள கம்பளி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 பேர் உடல்கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லூதியானாவில் அமைந்துள்ள அந்த கம்பளி தயாரிப்பு தொழிற்சாலையில்தான் அப்பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது இறந்துபோன சூரஜ், ராஜு மற்றும் சந்தர் ஆகியோர் தொழிற்சாலையின் ஒரு பிரிவில் வேலை செய்துகொண்டிருந்தனர். அந்த அறையின் கதவை உரிமையாளர் வெளிப்புறமாக பூட்டிவிட்டு சென்றதால் தீப்பிடித்தபோது அவர்களால் வெளியில் வர முடியவில்லை. சிறிது நேரத்தில் மூவரும் உடல் கருகி இறந்துவிட்டனர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர் சுரேந்தர் சிங் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
English summary
Three people on Monday died in a major fire that broke out in a wool factory in Ludhiana.
Story first published: Monday, August 25, 2014, 17:06 [IST]