பெங்களூருக்குள் நுழைய தனியார் பஸ்களுக்கு 3 நாள் தடை.. தமிழக பயணிகள் அவதி
பெங்களூர்: சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டையொட்டி, பெங்களூர் நகர மையப்பகுதிக்குள் தனியார் பஸ்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், வெளிமாநில பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொலை தூரங்களில் இறங்கி வேறு வாகனங்கள் மூலம், வீடு திரும்பும் நிலை பயணிகளுடையதாக உள்ளது.
கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, நாளை முதல் 5ம் தேதிவரை மொத்தம் 3 நாட்கள் பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலகின் பல நாட்டு தொழிலதிபர்களும் பெங்களூர் வருகிறார்கள்.

பெங்களூர் வரும் தொழிலதிபர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்கவும், நகரில் காற்று மாசடைவதை குறைத்து, நகரம் குறித்த ஒரு நல்ல காட்சியை ஏற்படுத்தவும், பெங்களூருக்குள் தனியார் பஸ்களை அனுமதிக்க கூடாது என்ற முடிவுக்கு, போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை ஆகியவை இணைந்து வந்துள்ளன.
முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் 3 நாட்களுக்கு மட்டும், தனியார் பஸ்களை மத்திய பெங்களூர் பஸ் நிலையமான மெஜஸ்டிக் மற்றும் அதன் 20 கி.மீ சுற்றுவட்டாரத்திற்குள் விட மாட்டோம் என்று போலீசார் அறிவித்திருந்தனர்.
இதனால் மெஜஸ்டிக், கலாசிபாளையம், சாந்திநகர், மடிவாளா போன்ற பகுதிகளில் இருந்து பஸ்கள் புறப்படாது, வராது என்று அறிவிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இத்தடை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று முதலே தனியார் பஸ்கள் சிட்டிக்குள் வருவது தடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
விஆர்எல் டிராவல்ஸ் நிறுவன நிர்வாகி ஒருவர் இதுபற்றி கூறும்போது, மும்பையில் இருந்து பெங்களூர் வந்த எங்கள் பஸ், பீன்யா பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பீன்யா சாட்டிலைட் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடும் நிலை வந்தது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக கூறி, ஏற்கனவே உள்ள தனியார் பஸ் முதலீட்டாளர்களுக்கு அரசு தொல்லை தருகிறது என்றார்.
தமிழகத்தில் இருந்துவரும் தனியார் பஸ்களும், நகரின் மையப்பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படி நுழைய வேண்டுமானால், காலை 6 மணிக்கு முன்பாகவே நகருக்குள் பஸ்கள் வந்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் பெங்களூருக்கு வரும் தனியார் பஸ்கள், நகருக்குள் செல்வதில்லை. எனவே, பயணிகள் தாங்கள் இறக்கிவிடப்படும் பகுதியில் இருந்து ஆட்டோ, டாக்சி மற்றும் நகர பேருந்துகள் மூலமாக, தாங்கள் போக வேண்டிய இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications