ராவணன் போல செயல்படுவோர் அழிந்து போவார்கள்.. ராதே மா "சாபம்"!
மும்பை: சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா, தான் கவர்ச்சிகரமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், யாரையும் நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ராவணன் போல செயல்படுவோர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார் ராதே மா.
கவர்ச்சி சாமியார் என கருதப்படும் ராதே மா குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளன. அவர் மீது சமீபத்தில் மும்பை போலீஸார் வரதட்சணைக் கொடுமை வழக்கைப் பதிவு செய்தனர்.
தனது பக்தர்களை அவர் நெருக்கமாக கட்டிப்பிடிப்பதாகவும், ஆபாசமாக டான்ஸ் ஆடுவதாகவும் கூட சர்ச்சைகள் உள்ளன. இந்த நிலையில்தான் கவர்ச்சிகரமான உடையில் அவர் உள்ள படங்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை மேலும் கூட்டின.
இந்த நிலையில் இதுகுறித்து வாய் திறந்துள்ளார் ராதே மா. இதுகுறித்து அவர் கூறியதாவது:

யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை
நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ராவணன் போல செயல்படுவோர், அவர்களே அழிவார்கள்.

உண்மையே வெல்லும்
வாய்மையே வெல்லும். சிவ பெருமான் உண்மையை வெளிக் கொண்டு வருவார். உண்மை அழகானது. அதுவே வெல்லும்.

கடவுள் பார்த்துக் கொள்வார்
சமூக சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வோரை கடவுள் பார்த்துக் கொள்வார். அவர்களுக்கு அவர் வெற்றியையும் தேடித் தருவார்.

ஏன் கட்டிப்பிடிக்கிறேன்
நான் எனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. என் மீது அவர்கள் காட்டும் அன்பை நான் கட்டிப்பிடித்து அவர்களுக்குத் திருப்பித் தருகிறேன் என்றார் அவர்.

விரைவில் விசாரணை
இதற்கிடையே, வரதட்சணைக் கொடுமை வழக்கில் விரைவில் ராதே மாவிடம் மும்பை போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications