For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத், ஹிமாச்சலில் அமையவுள்ள புதிய அரசுகளுக்கு வாழ்த்து- ராகுல்

குஜராத், ஹிமாச்சலில் அமையவுள்ள புதிய அரசுகளுக்கு வாழ்த்து என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம், புதிதாக அமையவுள்ள அரசுகளுக்கு வாழ்த்து என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தலிலும், ஹிமாச்சல பிரதேச தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இரு மாநில தேர்தல்களிலும் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்.

Rahul Gandhi congratulates the new governments to be formed in Gujarat and HP

என் மீது அன்பு வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். குஜராத், ஹிமாச்சலில் அமையவுள்ள புதிய அரசுகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். எதிராளியின் கோபத்தை காங்கிரஸ் கட்சியினர் நாகரீகத்தால் எதிர்கொண்டனர்.

நாகரீகமும் அஞ்சாமையும் காங்கிரஸின் பெரும் பலம் என்பதை நிலை நாட்டிவிட்டனர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் என்னை பெருமைப்படுத்திவிட்டனர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

English summary
Rahul Gandhi in his twitter page says that the Congress party accepts the verdict of the people and congratulates the new governments in both states. I thank the people of Gujarat and Himachal with all my heart for the love they showed me.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X