காங்கிரஸின் தேர்தல்களில் போலி உறுப்பினர்கள் விரைவில் நீக்கம் – ராகுல் காந்தி உத்தரவு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் போலி உறுப்பினர்களை விரைவில் நீக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸின் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அகில இந்திய பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

கட்சி தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். இதன் மூலமே கட்சிக்கு புத்துயிரூட்டவும், வலிமைப்படுத்தவும் முடியும் என்று ராகுல்காந்தி நம்புகிறார்.
எனவே நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை பலத்துடன் சந்திக்க வசதியாக கட்சியின் தேர்தல்களில் போலி உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்று அவர் கட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications