மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெ.வுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
டெல்லி: தமிழக முதல்வராக 6 வது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாக பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். அந்தவகையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று பதவியேற்றுள்ள ஜெயலலிதா அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சரின் பணி மிகச்சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்" என ராகுல் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Congratulations to Jayalalithaa ji & her Cabinet on taking oath. I wish her the very best
— Office of RG (@OfficeOfRG) May 23, 2016












Click it and Unblock the Notifications