ஓகி புயல் பாதித்த குமரியில் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல்காந்தி!
குமரி மாவட்டத்தில் மீனவ மக்களை சந்தித்து காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.
கன்னியாகுமரி: ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயலால் தென் தமிழகமான குமரி மாவட்டம் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உயிர் சேதம், பொருட்சேதம் என ஏற்பட்டது.

இந்த புயலால் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால்
அவர்களை எதிர்நோக்கி சின்னத்துறையில் கரையிலேயே உறவினர்களும், மீனவர்களும் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் இந்த புயல் கேரள மாநிலத்தையும் பதம் பார்த்ததால் அங்குள்ள பகுதிகளை பார்வையிட ராகுல் காந்தி இன்று காலை சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து குமரி மாவட்டம் சின்னத்துறைக்கு வருகை தந்தார்.
Tamil Nadu: Rahul Gandhi meets families of affected fishermen in Chinnathurai,Kanyakumari #CycloneOckhi pic.twitter.com/wKJQ2jEPCi
— ANI (@ANI) December 14, 2017
அங்கு மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மீனவர்களை மீட்க கோரி கரையில் இருந்த பெண்கள் ராகுலிடம் மனு அளித்தனர். காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக தமிழகம் வந்துள்ளார் ராகுல் காந்தி.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications