ராகுல் காந்தி வசம் காங்கிரஸ்.. நேரு குடும்பத்திலிருந்து வரும் 4வது தலைமுறை தலைவர்!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்தி நேரு குடும்பத்திலிருந்து 6-ஆவது நபராவார்.
டெல்லி: காங்கிரஸ் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்தி நேரு குடும்பத்திலிருந்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6-ஆவது நபராவார்.
1998-ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு பிறகு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று கொண்டார். சுமார் 19 ஆண்டுகாலமாக அப்பதவியில் அவர் நீடித்து வந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்க ராகுல் காந்தி கட்சியின் தலைவரானால்தான் முடியும் என்று மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாக அறிவித்தனர்.

விழாவில் பேச்சு
சோனியாகாந்தியும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தொண்டர்களின் ஆசை விரைவில் நிறைவேறும் என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கூறியிருந்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ராகுல் தலைவராக வேண்டும் என்று 89 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்தார்.

தொண்டர்கள் கொண்டாட்டம்
அவர் வரும் 16-ஆம் தேதி அப்பொறுப்பை ஏற்றுக் கொள்வார். இதையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஆடி பாடியும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நேரு குடும்பத்தில் 6-ஆவது நபர்
காங்கிரஸ் தலைவராக ராகுல் 87-ஆவது நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேரு குடும்பத்தில் அவர் 6-ஆவது நபராவார். மோதிலால் நேரு , அவரது மகன் ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தி ஆகிய நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை வகித்துள்ளனர். தற்போது 6-ஆவது நபராக ராகுல் பொறுப்பேற்றுள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications