காங். கூட்டத்தில் ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை
டெல்லி: இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி பிரசார குழு தலைவராக அறிவிக்கப்படவிருக்கிறார். இன்றைய கூட்டத்தில் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.

மேலும் ராகுல் காந்தியை பிரசார குழு தலைவராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இன்று நடக்கும் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் காங்கிரஸுக்கு இல்லை என்று நேற்றைய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
இது குறித்து பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில்,
காங்கிரஸுக்கு தெரியும் அது பதவிக்கு வராது என்று. அதனால் தான் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications