ஐத்திங்.. காப்பீடு சட்ட திருத்த மசோதாவில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடவில்லை: சொல்வது ராகுல் காந்தி
டெல்லி: காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு சதவீத அதிகரிப்பு தொடர்பான சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடவில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.
இந்திய காப்பீட்டுத்துறையில், தற்போதுள்ள அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்க பிரதமர் மோடியின் அமைச்சரவை முடிவு செய்தது. ஆனால் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக பாராளுமன்ற விவகார அமைச்சர் வெங்கையா நாயுடு டெல்லியில் கூட்டிய அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த காப்பீட்டு சட்ட திருத்த மசோதா 2008ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டதுதான்.

அதைத்தான் இப்போது நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம். ஆனால் இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று பா.ஜனதா கண்டனம் தெரிவித்து இருந்தது. இது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் கேட்டபோது, நாங்கள் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் பிரச்சினையில் இரட்டை வேடம் போடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். ஐத்திங்.. காங்கிரஸ் இரட்டைவேடம் போடவில்லை என்று கருதுகிறேன் என்று நாடாளுமன்ற வளாகத்தில் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
டெல்லி மேல்-சபை காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத் கூறும்போது, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். இது எங்களது குழந்தைதான். ஆனால் இதை 2008ல் பா.ஜனதா எதிர்த்தது. எனினும் இந்த மசோதாவில் சில பயனுள்ள திருத்தங்களை செய்யவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.
பாராளுமன்ற தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பிய பின்பு இந்த மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரின்போது நிறைவேற்றலாம். என்றார்.
-
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications