4 ஆண்டுகால மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட ராகுல் காந்தி.. A+ கிரேடு எதற்கு தெரியுமா?
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று 4 வருடம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், பாஜக சார்பில் அரசின் சாதனைகளை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில், மோடி அரசின் 'ரிப்போர்ட் கார்ட்' வெளியிட்டுள்ளார்.
அதில் 4 வருட ரிப்போர்ட் கார்ட் என கூறிப்பிட்டு, விவசாயம், வெளிநாட்டு கொள்கை, எரிபொருள் விலை, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றை குறிப்பிட்டு இதில் எல்லாம் ஃபெயில் என கூறியுள்ளார்.
அதேநேரம், கோஷங்களை உருவாக்குவது, சுய விளம்பரம் ஆகியவற்றில் இந்த அரசுக்கு ஏ பிளஸ் எனப்படும் உச்சபட்ச கிரேடை வழங்கியுள்ளார். யோகாவில் பி நெகட்டிவ் என கூறி கிண்டல் செய்துள்ளார்.
4 Yr. Report Card
— Rahul Gandhi (@RahulGandhi) May 26, 2018
Agriculture: F
Foreign Policy: F
Fuel Prices: F
Job Creation: F
Slogan Creation: A+
Self Promotion: A+
Yoga: B-
Remarks:
Master communicator; struggles with complex issues; short attention span.
மொத்தத்தில் இந்த ஆட்சி குறித்த கருத்து என குறிப்பிட்டு, தகவல் தொடர்பில் மாஸ்டர் என்றும், சிக்கலான விவகாரங்களில் தடுமாறி வருவதாகவும், கவன குவிப்பில் மோசம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.