4 ஆண்டுகால மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட ராகுல் காந்தி.. A+ கிரேடு எதற்கு தெரியுமா?
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று 4 வருடம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், பாஜக சார்பில் அரசின் சாதனைகளை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில், மோடி அரசின் 'ரிப்போர்ட் கார்ட்' வெளியிட்டுள்ளார்.

அதில் 4 வருட ரிப்போர்ட் கார்ட் என கூறிப்பிட்டு, விவசாயம், வெளிநாட்டு கொள்கை, எரிபொருள் விலை, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றை குறிப்பிட்டு இதில் எல்லாம் ஃபெயில் என கூறியுள்ளார்.
அதேநேரம், கோஷங்களை உருவாக்குவது, சுய விளம்பரம் ஆகியவற்றில் இந்த அரசுக்கு ஏ பிளஸ் எனப்படும் உச்சபட்ச கிரேடை வழங்கியுள்ளார். யோகாவில் பி நெகட்டிவ் என கூறி கிண்டல் செய்துள்ளார்.
4 Yr. Report Card
— Rahul Gandhi (@RahulGandhi) May 26, 2018
Agriculture: F
Foreign Policy: F
Fuel Prices: F
Job Creation: F
Slogan Creation: A+
Self Promotion: A+
Yoga: B-
Remarks:
Master communicator; struggles with complex issues; short attention span.
மொத்தத்தில் இந்த ஆட்சி குறித்த கருத்து என குறிப்பிட்டு, தகவல் தொடர்பில் மாஸ்டர் என்றும், சிக்கலான விவகாரங்களில் தடுமாறி வருவதாகவும், கவன குவிப்பில் மோசம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications