ராகுல் காந்தி 2-வது பாதயாத்திரை! குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை ஒற்றுமை நடைபயணம்!
ராகுல் காந்தி மீண்டும் 2-வது பாதயாத்திரையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ராய்ப்பூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஒற்றுமை பயண யாத்திரையை மேற்கொள்ள இருக்கிறார். குஜராத்தின் போர்பந்தர் முதல் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் வரை தமது 2-வது பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து 150 நாட்கள் 4,080 கி.மீ தொலைவு நடந்தே காஷ்மீரை சென்றடைந்தார் ராகுல் காந்தி. ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரில் கடந்த ஜனவரி 30-ந் தேதி இந்த பாதயாத்திரை நிறைவடைந்தது.

ராகுல் காந்தி பாதயாத்திரையானது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக காஷ்மீரை சென்றடைந்தது. ராகுல் காந்தியின் இந்த 5 மாத பாதயாத்திரை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க உதவியது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி தமது 2-வது பாதயாத்திரையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ராகுல் காந்தியின் 2-வது ஒற்றுமை யாத்திரையானது இந்தியாவின் மேற்கு எல்லையில் தொடங்கி கிழக்கு எல்லை வரை நடைபெறுகிறது. அதேநேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கி குஜராத் வரை இந்த யாத்திரை நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் 2-வது யாத்திரை, குஜராத் மாநிலம் போர்பந்தரில் தொடங்குகிறது. கிழக்கு எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் பாசி கட் வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. ராகுல் காந்தியின் 2-வது பாதயாத்திரை எப்போது தொடங்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையுடன் என் அரசியல் பயணம் நிறைவடைகிறது என சுட்டிக்காட்டி பேசியிருந்தார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரது ஆளுமையை பாரத் ஜோடோ யாத்திரை வலிமையாக வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications