அவசர சட்டம்..கடினமான வார்த்தையைத்தான் பயன்படுத்திட்டேனே.. ராகுல் வருத்தம்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: தண்டனை பெற்ற எம்.பிக்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக முட்டாள்தனமானது என்ற கடினமான வார்த்தையைப் பயன்படுத்திவிட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாருத்தம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, அவசர சட்டம் 'முட்டாள்தனமானது' என்ற கருத்து இதயத்தில் இருந்து வெளி வந்தது. 'முட்டாள்தமானது' என்ற வார்த்தை கடினமானது என்று என் அம்மா சோனியா காந்தி என்னிடம் கூறினார்.

நான் பயன்படுத்தியது கடினமான வார்த்தையாக இருந்தாலும் என்னுடைய உணர்வுகள் மிகவும் சரியானது. இனி அதுபோன்ற கடினமான வார்த்தைகளை நான் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications