ராகுலின் 'படுகொலை' பேச்சு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் கூறுகையில், நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர ஆக்கப்பூர்வமான புதிய கொள்கை முடிவுகளை கூறி மக்களிடம் வாக்குகளைக் கேட்க வேண்டும்.
இது போன்ற உணர்வுப்பூர்வமான பேச்சுக்களை மக்கள் விரும்புவதில்லை. ஆகையால் இதை ராகுல் காந்தி கைவிட வேண்டும் என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி கூறும்போது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் கொல்லப்பட்டதாக ராகுல் காந்தி கூறுவது, குடும்ப அரசியல் நடைபெற்று வந்ததை காண்பிக்கிறது.
ஜனநாயகத்துக்கு உண்மையான அச்சுறுத்தல் இதுதான். குடும்பத்தினர் கொலையுண்டதைக் கூறி வாக்குச் சேகரிக்கும் ராகுலின் சுயநல அரசியல் கண்டனத்துக்குரியது என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் தேர்தலின் போது ராகுல் காந்தி உணர்வுப்பூர்வமாக பேசுவது துரதிருஷ்டவசமானது. இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க முடியாத நெருக்கடியில் ராகுல் காந்தி உள்ளதால் இவ்வாறு பேசுகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications