Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழல் வழக்கு: முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் சாட்சியம் அளித்தார்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்வே துறையில் வேலை வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படும் வழக்கில், ரயில்வே துறை முன்னாள் அமைச்சர் பவன்குமார் பன்சால் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்

மன்மோகன்சிங் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தவர் பவன் குமார் பன்சால். கடந்த ஆண்டு மே மாதத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார் என்பவரை பணியிடத்தில் நியமிக்க மகேஷ் குமாரிடம் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா என்பவர் ரூ.10 கோடி லஞ்சம் கேட்டதாக தெரிய வந்தது.

Railgate: Ex-Railway Minister Pawan Kumar Bansal appears as witness

பணியிட மாற்றத்துக்கு முன்பு, ரூ.5 கோடியும், பிறகு ரூ.5 கோடியும் தருவதாக பேசி முடிக்கப்பட்டது. அதில் முதல் தவணையாக ரூ.90 லட்சத்தை விஜய் சிங்லா பெற்றுக்கொண்டபோது, அவரை கையும், களவுமாக சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

மகேஷ் குமார் மற்றும் தரகர்கள் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழல் காரணமாக, பவன் குமார் பன்சால் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இவ்வழக்கில் அவர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

அரசு தரப்பு சாட்சியாக சாட்சி அளிப்பதற்கு பவன் குமார் பன்சாலுக்கு கடந்த 16ந் தேதி ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், உடல் நலக்குறைவு குறைவு காரணமாக அன்றையை தினம் ஆஜாரக முடியாது என்றும் வேறு ஒரு தேதியில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து இன்று ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+