ஊழல் வழக்கு: முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் சாட்சியம் அளித்தார்!
டெல்லி: ரயில்வே துறையில் வேலை வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படும் வழக்கில், ரயில்வே துறை முன்னாள் அமைச்சர் பவன்குமார் பன்சால் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்
மன்மோகன்சிங் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தவர் பவன் குமார் பன்சால். கடந்த ஆண்டு மே மாதத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார் என்பவரை பணியிடத்தில் நியமிக்க மகேஷ் குமாரிடம் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா என்பவர் ரூ.10 கோடி லஞ்சம் கேட்டதாக தெரிய வந்தது.

பணியிட மாற்றத்துக்கு முன்பு, ரூ.5 கோடியும், பிறகு ரூ.5 கோடியும் தருவதாக பேசி முடிக்கப்பட்டது. அதில் முதல் தவணையாக ரூ.90 லட்சத்தை விஜய் சிங்லா பெற்றுக்கொண்டபோது, அவரை கையும், களவுமாக சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
மகேஷ் குமார் மற்றும் தரகர்கள் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழல் காரணமாக, பவன் குமார் பன்சால் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இவ்வழக்கில் அவர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
அரசு தரப்பு சாட்சியாக சாட்சி அளிப்பதற்கு பவன் குமார் பன்சாலுக்கு கடந்த 16ந் தேதி ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், உடல் நலக்குறைவு குறைவு காரணமாக அன்றையை தினம் ஆஜாரக முடியாது என்றும் வேறு ஒரு தேதியில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications