பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை எதிர்கொள்ள ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்து?
பண்டிகை காலங்களில் பயணிகள் நெரிசலை எதிர்கொள்ளும் வகையில் ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
டெல்லி: பண்டிகை காலங்களில் ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய ரயில்கள் அறிமுகம்
துர்கா பூஜை, தீபாவாளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்த 40 நாட்களில் வருகின்றன. இதையொட்டு அக்டோபர் 15 முதல் அக்டோபர் 30-ந் தேதி வரை புதிய ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

4,000 சிறப்பு ரயில்கள்
கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் 3,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. நடப்பாண்டில் 4,000 சிறப்பு ரயில்களை இயக்கப்படும்.

ஊழியர்கள் விடுமுறை ரத்து
மேலும் பண்டிகை காலங்களில் அனைத்து ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை எதிர்கொள்ளும் வகையில் ஊழியர்களின் வி0டுமுறையை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கிறோம்.

ப்ளாட்பார்ம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்
பண்டிகை காலங்களில் முக்கிய ரயில் நிலையங்களில் பந்தல்களை அமைக்கவும் கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல் பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ப்ளாட்பார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு மனோஜ் சின்ஹா கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications