பெண்களின் பாதுகாப்புக்காக ரயில்வேயில் 'ஆப்' அறிமுகம்
டெல்லி: ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, மொபைல் போன்களில் பயன்படுத்தக் கூடிய,'ஆப்' எனப்படும் செயலியை, ரயில்வே துறை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மொபைல் ஆப் வசதியைப் பயன்படுத்தி பெண் பயணிகள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வரும் நேரத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவியைப் பெறலாம்.
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இது குறித்து டெல்லியில், நேற்று நடந்த ரயில்வே தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, 'ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு, போதிய பாதுகாப்புஇல்லை' என, பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

தனியாக பயணம்செய்யும் பெண்களுக்கு, விஷமிகளால் தொல்லை ஏற்படுகிறது. இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக, ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளில், கண்காணிப்பு கேமராவை பொருத்தும் நடவடிக்கை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
அடுத்தபடியாக, மேற்கு ரயில்வேயில், பெண்கள் பாதுகாப்புக்காக, மொபைல் போன்களில் பயன்படுத்த கூடிய, பிரத்யேக ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பெண்கள், தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும்போது, மொபைல் போனில் உள்ள இந்த, 'ஆப்'பை பயன்படுத்தி, ரயில்வே பாதுகாப்பு படையின் உதவியை உடனடியாக நாடலாம். இதுபோன்று, மேலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications