கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.. பீதியை கிளப்பும் வானிலை மையம்!
கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கொட்டி வரும் வரலாறு காணாத மழையால் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடுமையான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கேரளாவில் பேரழிவு
கேரளத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருவதால் ஆலப்புழா, பத்தனம்திட்டை, இடுக்கி, எர்ணாக்குளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் 186 பேர் பலி
ஆகஸ்டு 8ஆம் தேதி முதல் மழை, வெள்ளம், மண்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நாள் முதல் இதுவரை 186பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

கடும் இழப்பு
தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா, வேளாண்மை ஆகிய துறைகள் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளன.

மீட்புப்பணிகளில் ராணுவம்
நெல், வாழை ஆகிய பயிர்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலைகள் சேதமடைந்துள்ளன. மீட்புப்பணிகளில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

3 நாட்கள் மழை நீடிக்கும்
இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கேரளாவில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் பீதி
ஏற்கனவே கொட்டி வரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் கேரள மாநிலம் சின்னாபின்னமாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications