For Daily Alerts
Just In
பெங்களூரில் காற்றுடன் கன மழை.. மீண்டும் ஃபார்முக்கு வந்தது பூங்காநகரம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இன்று மாலை காற்றுடன் நல்ல மழை கொட்டியது. காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட பூங்கா நகரமான பெங்களூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நல்ல மழை பெய்த நிலையில், இன்று மாலையில் திடீரென வானில் கரு மேகங்கள் தோன்றி, நல்ல மழை கொட்டியது.
அப்போது பலத்த காற்றும் வீசியதால் தெற்கு பெங்களூரின் பல பகுதிகளில் மரம் விழுந்துள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக பன்னேர்கட்டா, மடிவாளா, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஓடுமளவுக்கு மழை கொட்டியது.
பகல் முழுக்க ஓரளவுக்கு வெப்பம் நிலவினாலும், மாலை முதல், குளுகுளு வானிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Comments
English summary
Rain and wind lashes in south Bengaluru and of course power cut as well.
Story first published: Sunday, May 8, 2016, 17:45 [IST]