பீகார் பெண்ணுக்கும் ராஜஸ்தான் இளைஞருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி?.. ஐசியூவில் சிகிச்சை
Recommended Video
டெல்லி: பீகார் பெண்ணுக்கும் ராஜஸ்தான் இளைஞருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். இந்த வைரஸ் நோயால் இதுவரை 2060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹாங்காங், மெக்சிகோ, தைவான் நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைரஸை தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை சீனா மேற்கொண்டுள்ளது. விலங்குகளை விற்கவோ, வளர்க்கவோ, இறைச்சிக்காக பயன்படுத்தவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட மருத்துவமனை
இந்த நிலையில் வுகானில் இதற்காக பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்படுகிறது. இன்னும் 6 நாட்களுக்குள் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது. வுகானில் இன்னும் 250 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சீன புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்தியர்கள் பலர் வெளியேறிவிட்டனர். இந்தியாவிலிருந்து சீனா சென்று படித்துவரும் மாணவர்கள் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு
அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

புனேவில் ஆய்வகம்
மீதமுள்ள 6 பேர் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவ மாணவர் என கூறப்படுகிறது. அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
அது போல் சீனாவிலிருந்து பாட்னா திரும்பிய பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ் , நேபாளம், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட கொரோனா வைரஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications