மனம் மாறிய பாஜக! ராஜஸ்தானில் மீண்டும் வசுந்தரா போட்டி! கெலாட், பைலட்டுக்கு காங்கிரஸ் வாய்ப்பு-லிஸ்ட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ‛கல்தா' கொடுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு மீண்டும் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் தற்போதைய முதல்வர் அசோக கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் தான் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 101இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் தான் அங்கு ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீட்டெடுக்க பாஜகவும் முயன்று வருகிறது. இதற்கிடையே தான் பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கும், பாஜக மேலிடத்துக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனால் வசுந்தர ராஜே கட்சி பணிகளில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார்.
அதோடு பாஜகவின் தேர்தல் நிர்வாக குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆகியவற்றிலும் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கு இடம் வழங்கப்படவில்லை. இதனால் வரும் தேர்தலில் வசுந்தர ராஜேவுக்கு பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது.
அதாவது ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜி சிந்தியாவுக்கு ஜால்ராபதன் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2003, 2008, 2013, 2018 என தொடர்ந்து 4 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தான் தற்போது 5வது முறையாக அந்த தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இன்று 33 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் சர்தார்புரா தொகுதியில் களமிறங்கி உள்ளார். இவர் இந்த தொகுதியில் இருந்து 1998, 2003, 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் அங்கு போட்டியிட்டுள்ளார்.
மேலும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் டோங்க் சட்டசபை தொகுதியில் களமிறங்கி உள்ளார். சச்சின் பைலட் தற்போது இந்த தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள நிலையில் மீண்டும் அவர் அங்கு களமிறங்கி உள்ளார். ராஜஸ்தானை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது. நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் நிலையில் பதிவாகும் ஓட்டுகள் பிற மாநிலங்களை போல் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது அங்கு காங்கிரஸ், பாஜக கட்சியினர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் அங்குள்ள அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications