ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்.. முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக 'சாதி'
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக சில முக்கிய சாதிகளே இருப்பதால் பிரதான கட்சிகளின் பிரசாரமும் அவற்றை மையப்படுத்தியே இருக்கின்றன.
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகளுடன் பகுஜன் மற்றும் இடதுசாரிகளும் மல்லுக் கட்டுகின்றன.

200 தொகுதிகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 141 பொதுத் தொகுதிகள். பழங்குடி இனத்தவர் தொகுதிகள் எண்ணிக்கை- 25. தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் 34.

45,000 வாக்குச் சாவடிகள்
இம்மாநிலத்தில் மொத்தம் 45,334 வாக்குச் சாவடிகள் உள்ளன.

சம பலத்தில் காங்கிரஸ்- பாஜக
2008ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 35.60% வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 36.92% வாக்குகளும் கிடைத்தன. அதாவது நம்ம ஊர் திமுக, அதிமுக போல சம பலத்தில் இருக்கின்றன பாஜகவும் காங்கிரஸும்.

காங்கிரஸ் -96
காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளில் போட்டியிட்டு 96 இடங்களில் வென்றது.

பாஜக- 78
பாரதிய ஜனதா கட்சி 193 தொகுதிகளில் போட்டியிட்டு 78 இடங்களைக் கைப்பற்றியது.

ஆச்சரிய பகுஜன்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்வாக்காக திகழும் பகுஜன் சமாஜ்கட்சி, ராஜஸ்தான் மாநிலத்தில் 199 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதன் வாக்கு சதவிகிதம் 7.66%.

சிபிஎம்-க்கு 3
34 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு 3 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.

இடதுசாரிகள் டெபாசிட் இழப்பு
34 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர்களில் 29 பேர் டெபாசிட் இழந்தனர். 21 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அனைவருமே டெபாசிட் இழந்தனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி 9.22%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2.11% வாக்குகளைப் பெற்றிருந்தது.

சாதிகளே தீர்மானிக்கும் சக்தி
ராஜஸ்தானில் கடந்த தேர்தல்களைப் போலவே தற்போதும் ராஜ்புத்திரர்கள், பிராமணர்கள், குர்ஜார்கள், மீனாக்கள் போன்ற முக்கிய சாதிகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. இதனால் பாரதிய ஜனதா, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகளும் கூட தேர்தல் அறிக்கையில் இந்த சாதிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன. தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களிலும் சாதிய பிரபலங்களை மேடையேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன கட்சிகள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications