வாய்விட்டு வம்பில் சிக்கிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்! ஹைகோர்ட்டில் மன்னிப்பு! என்னாச்சு?
ஜெய்ப்பூர்: நீதித்துறையில் ஊழல் உள்ளதாக விமர்சித்து சர்ச்சையை கிளப்பிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி அசோக் கெலாட் பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது அன்றைய தினம் பத்திரிகையாளர்களை அசோக் கெலாட் சந்தித்தார். அப்போது அவர் நீதித்துறையை விமர்சனம் செய்தது தான் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.
அதாவது ‛‛நீதித்துறையில் இன்று ஊழல் தலைவிரித்தாடுகிறது. சில வழக்கறிஞர்கள் தாங்களாகவே தீர்ப்பை எழுதி வழங்குவதாக கேள்விபட்டேன்'' என்றார். அசோக் கெலாட்டின் இந்த கருத்து என்பது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை சீர்க்குலைக்கும் வகையில் இருந்தது. இதனால் அவரது கருத்தை பலரும் கண்டித்தனர்.
அதோடு அசோக் கெலாட்டுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கினர். மேலும் அசோக் கெலாட்டுக்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அசோக் கெலாட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தனது கருத்து குறித்து அசோக் கெலாட் நீதிமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தான் அசோக் கெலாட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நீதித்துறை குறித்த தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், ‛‛எனது கருத்து புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உள்நோக்கத்துடன் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. நீதித்துறையை நான் எப்போதும் மதித்து வருகிறேன். அதோடு நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது'' என்பன போன்ற விபரங்கள் அடங்கி உள்ளன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications