ராஜஸ்தான் தேர்தல்.. யாருக்கு அதிக செல்வாக்கு.. பாஜகவா?.. காங்கிரசா? வெளியான புது சர்வே!
ஜெய்பூர்: ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், என்.டி.டிவி நடத்திய சர்வே விவரங்களை காணலாம்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் கடந்த 1993 ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. எனவே வரும் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் வென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையை பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில், கடந்த கால வரலாறுகளை மாற்றி ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசும் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது.
பாஜகவுக்கு வாய்ப்பு?: ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 6 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நெருங்கி வந்து விட்ட நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.
இதனிடையே பிரபல ஆங்கில தொலைகாட்சி நிறுவனமான என்.டி.டிவி நடத்திய கருத்துக்கணிப்புகளை இன்று வெளியிட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்திய கருத்துக்கணிப்புகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு செல்வாக்கு அதிகமா அல்லது பிரதமர் மோடிக்கு செல்வாக்கு அதிகமாக என்று சர்வே நடத்தி அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
மோடியின் செல்வாக்கு: இதன்படி, பிரதமர் மோடியை பிடிக்கும் என 37 சதவிகிதம் பேரும், அசோக் கெலாட்டிற்கு ஆதரவாக 32 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இருவருமே பிடிக்கும் என 20 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கடுமையான எதிர்ப்பு இல்லையென்றாலும் கூட பிரதமர் மோடியின் செல்வாக்கு இன்னும் மங்கவில்லை. பிரதமர் மோடிக்கு இருக்கும் கூடுதல் செல்வாக்கு அங்கு பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உதவும் என்று பாஜகவினரும் நம்புகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications