திடீரென உயர்ந்த கிராப்.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. ராஜஸ்தானில் மீண்டும் 144 தடை உத்தரவு!
ஜெய்ப்பூர்: கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதை தொடர்ந்து ராஜஸ்தானில் நாளையில் இருந்து மீண்டும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இரண்டாம் அலை தொடங்கி விட்டதோ என்று அச்சம் கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

டெல்லி, கேரளா, குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில் தினசரி கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று இரவில் இருந்து இரவு நேர (இரவு 9 to காலை 6) லாக் டவுன் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதை தொடர்ந்து ராஜஸ்தானில் நாளையில் இருந்து மீண்டும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. நாளையில் இருந்து மாநிலம் முழுக்க 144 தடை அமலில் இருக்கும் என்று ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை தவிர பிற கடைகள், நிறுவனங்கள் திறந்து இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இதுவரை 2,34,907 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் .
20,168 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 2,12,623 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,116 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். ராஜஸ்தானில் தினசரி சராசரியாக 1500 கேஸ்கள் வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 2500+ கேஸ்கள் வருகிறது. இதையடுத்து தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications