பணக்காரர்களுடன் டேட்டிங்... நிர்வாண போட்டோ... மிரட்டி பணம் பறித்த பெண் தாதா கைது
பணக்கார இளைஞர்களுடன் டேட்டிங் சென்று அங்கு அவர்களை நிர்வாணமாக்கி பணம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான் பெண் தாதா கைது செய்யப்பட்டார்.
Recommended Video
ஜெய்ப்பூர்: பணக்கார இளைஞர்களுடன் டேட்டிங் சென்றுவிட்டு அங்கு அவர்களை நிர்வாணமாக்கிய பிறகு அவர்களுடன் எடுத்த போட்டோவை காட்டி பணம் பறித்த பெண் தாதா, கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் துஷ்யந்த் சர்மா(27). இவருக்கு மொபைல் டேட்டிங் ஆப் மூலம் பிரியா சேத் (27) என்பவர் அறிமுகமானார். சர்மா தான் ஒரு கோடீஸ்வரன் என்று ப்ரொபைலில் போட்டிருந்தார்.
இதை கண்டதும் பிரியா சேத், சர்மாவுடன் நெருங்கி பழகியுள்ளார். பின்னர் ஜெய்ப்பூரில் குடியிருக்கும் ஒரு அபார்டமென்ட்டுக்கு மதிய உணவுக்காக பிரியா சேத், சர்மாவுக்கு அழைப்பு விடுத்தார்.
ரூ. 10 லட்சம் பணம்
இதனால் பல்வேறு கனவுகளுடன் பிரியா சேத்தின் வீட்டுக்கு சர்மா சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே பிரியாவின் நண்பர்கள் திக்ஷாந்த் கம்ரா (20), லக்ஷயா வாலியா (21) ஆகியோர் தயாராக இருந்தனர். இதையடுத்து சர்மாவை ஒரே அமுக்காக அமுக்கி அவரை கட்டி போட்டு அவரது தந்தையிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டினர்.
யார் இந்த பிரியா
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூர் போலீஸார் விசாரணை நடத்தியபோது பிரியா சேத்தும் அவரது கூட்டாளிகளும் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சர்மாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீஸாரிடம் பல்வேறு திடுக் தகவல்களையும் அவர்கள் அளித்தனர். பிரியா சேத்தின் தந்தை ராஜஸ்தான் அரசு கல்லூரியின் பேராசிரியர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டிருந்த சமயத்தில் ஒரு பேப்பரில் பகுதி நேர வேலைக்கான விளம்பரம் வந்திருந்தது.
பாலியல் தொழில்
அப்போது அங்கு கொடுக்கப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது பாலியல் தொழிலுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் வருமானம் குவியும் என்று அந்த ஏஜென்ட் கூறியுள்ளார். இதனால் அளவற்ற பணத்தாசை பிடித்த பிரியா சேத், தனது நண்பர்களுடன் சேர்ந்து பணப்பறிப்பில், ஏடிஎம் கொள்ளை என கிரைம் ரேட்டை கூட்டிக் கொண்டே சென்றார்.
நிர்வாணமாக போட்டோ
டேட்டிங் ஆப் மூலம் பணக்கார நபர்களுடன் பழகி அவர்களை வீட்டுக்கு வரவழைத்து விருந்து அளிப்பார். பின்னர் அவர்களது உடைகளை அவரே எடுத்துவிட்டு அவர்களுடன் நெருங்கி நின்றபடி போட்டோ எடுத்து அதை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.