Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டுமானம் முடியும் முன்பே ராமர் கோவில் கும்பாபிஷேகமா? விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த அதிகாரி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அரசியல் நோக்கோடு நடப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொண்ட குழுவின் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பூரியின் கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுப்பு தெரிவித்தார். அதேபோல உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி இந்த ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக புகார் கூறியிருந்தார்.

Ram Temple consecration before completion of construction? Senior official explains the criticism


குறிப்பாக மோடியை விமர்சித்த அவர் கூறுகையில், “நரேந்திர மோடி தனது காசி வழித்தட திட்டத்திற்காக பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களை இடித்து அதில் இருந்த சிலைகளை குப்பையில் போட்டார். இந்த விழா "சாஸ்திரங்களுக்கு எதிராக" அல்லது "புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக" நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக கோவில் கட்டுமானம் முழுமையடையாததால் இது மிகப்பெரிய விதி மீறல் என்று அவர் புகார் வைத்துள்ளார்.

சங்கராச்சாரியார்கள் நாட்டின் நான்கு மூலைகளிலும் உள்ள மடாதிபதிகள் ஆவர். வடக்கில் உத்தரகாண்ட், கிழக்கில் ஒடிஷா, தெற்கில் கர்நாடகா, மேற்கில் குஜராத் என நான்கு திசைகளிலும் உள்ள இந்த சங்கராச்சாரியார்கள் இந்து மதத்தின் மிக உயரிய தலைவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அவசரம் காட்டுவதாக சங்கராச்சாரியார்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கும்பாபிகேஷக விழவில் கலந்து கொள்வது இல்லை என அறிவித்துள்ளனர்.

மேலும் இரண்டு சங்கராச்சாரியார்கள் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார்கள். ஒடிஷாவின் பூரி மற்றும் உத்தரகாண்டின் ஜோஷிமத் சேர்ந்த சங்கரச்சார்யாக்கள் கடுமையாக விமர்சனம் முன்வைத்தனர். அரசியல் நோக்கோடு கும்பாபிஷேக விழா நடப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொண்ட குழுவின் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்தார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு மிஸ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:- சங்கராச்சாரியாக்கள் தர்ம குருக்கள். நான் ஒன்றுமே இல்லை.. சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு. இருந்தாலும். நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் அறிவித்தது என்னவென்றால் பால ராமர் அதாவது குழந்தை ராமர் கோவிலின் தரை தளத்தில் உள்ளார். தரை தளத்தில் தான் கர்ப்பகிரகம் உள்ளது.

ஐந்து மண்டபங்கள் உள்ளன. உருவப்படம் அமைந்துள்ளது. இவை அனைத்தும் முழுமை அடைந்துவிட்டது. இன்னும் கட்டுமானம் முழுமையாடதது என்னவென்றால் முதல் தளம் தான். முதல் தளம் என்பது ராம தர்பாருக்கானது. அங்கு ராஜா ராம் வருவார்.. அவருடன் சீதா அமர உள்ளார். முதல் தளத்தில் ராமர், சீதா, லக்‌ஷமன் மற்றும் அனுமான் ஆகியோர் இருப்பார்கள்” என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+