கட்டுமானம் முடியும் முன்பே ராமர் கோவில் கும்பாபிஷேகமா? விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த அதிகாரி
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அரசியல் நோக்கோடு நடப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொண்ட குழுவின் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பூரியின் கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுப்பு தெரிவித்தார். அதேபோல உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி இந்த ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக புகார் கூறியிருந்தார்.

குறிப்பாக மோடியை விமர்சித்த அவர் கூறுகையில், “நரேந்திர மோடி தனது காசி வழித்தட திட்டத்திற்காக பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களை இடித்து அதில் இருந்த சிலைகளை குப்பையில் போட்டார். இந்த விழா "சாஸ்திரங்களுக்கு எதிராக" அல்லது "புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக" நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக கோவில் கட்டுமானம் முழுமையடையாததால் இது மிகப்பெரிய விதி மீறல் என்று அவர் புகார் வைத்துள்ளார்.
சங்கராச்சாரியார்கள் நாட்டின் நான்கு மூலைகளிலும் உள்ள மடாதிபதிகள் ஆவர். வடக்கில் உத்தரகாண்ட், கிழக்கில் ஒடிஷா, தெற்கில் கர்நாடகா, மேற்கில் குஜராத் என நான்கு திசைகளிலும் உள்ள இந்த சங்கராச்சாரியார்கள் இந்து மதத்தின் மிக உயரிய தலைவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அவசரம் காட்டுவதாக சங்கராச்சாரியார்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கும்பாபிகேஷக விழவில் கலந்து கொள்வது இல்லை என அறிவித்துள்ளனர்.
மேலும் இரண்டு சங்கராச்சாரியார்கள் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார்கள். ஒடிஷாவின் பூரி மற்றும் உத்தரகாண்டின் ஜோஷிமத் சேர்ந்த சங்கரச்சார்யாக்கள் கடுமையாக விமர்சனம் முன்வைத்தனர். அரசியல் நோக்கோடு கும்பாபிஷேக விழா நடப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொண்ட குழுவின் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு மிஸ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:- சங்கராச்சாரியாக்கள் தர்ம குருக்கள். நான் ஒன்றுமே இல்லை.. சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு. இருந்தாலும். நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் அறிவித்தது என்னவென்றால் பால ராமர் அதாவது குழந்தை ராமர் கோவிலின் தரை தளத்தில் உள்ளார். தரை தளத்தில் தான் கர்ப்பகிரகம் உள்ளது.
ஐந்து மண்டபங்கள் உள்ளன. உருவப்படம் அமைந்துள்ளது. இவை அனைத்தும் முழுமை அடைந்துவிட்டது. இன்னும் கட்டுமானம் முழுமையாடதது என்னவென்றால் முதல் தளம் தான். முதல் தளம் என்பது ராம தர்பாருக்கானது. அங்கு ராஜா ராம் வருவார்.. அவருடன் சீதா அமர உள்ளார். முதல் தளத்தில் ராமர், சீதா, லக்ஷமன் மற்றும் அனுமான் ஆகியோர் இருப்பார்கள்” என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications