Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாஜ்மஹாலை விட ராமர்பாலம் சிறந்தது! சர்ச்சையை கிளப்பிய கர்நாடக மடாதிபதி.. பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

உத்தர கன்னடா: ‛‛இறந்த மனைவியின் நினைவாக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டியதை விட ராமர் தனது மனைவியை மீட்பதற்காக ராமர் பாலம் கட்டியதே சிறந்தது'' என கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீராமசந்திரபூர் மடத்தின் மடாதிபதியான ராகவேஸ்வரா சுவாமி பேசினார்.

உத்தர கன்னடா மாவட்டம் குமட்டாவில் பிரகதி வித்யாலயா ராம்லீலா மைதானம் உள்ளது. இங்கு ராமர் கதை மற்றும் பாலம் குறித்த 5 நாள் போதனைகள் நடைபெற உள்ளது.

 Ramar bridge is better than taj mahal, says seer ragaveshwara swamy

முதல் நாள் போதனை நேற்று நடந்தது. இதில் ஸ்ரீராம சந்திரபூர் மடத்தின் மடாதிபதியான ராகவேஸ்வரா சுவாமி பேசினார். அப்போது அவர் ராமர் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சீதைக்காக ராமர் இரண்டாம் உலக போரை நடத்தினார். சீதையை மீட்க கடலில் பாலம் கட்டப்பட்டது. இத்தகைய அன்பு குறித்து யார் தான் கேள்வி எழுப்ப முடியும். இதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். கடலில் பாலம் கட்டியவர் யார் என்றால் அது ராமர் மட்டுமே. இந்த பாலம் தான் தற்போது ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.

குரு-சிஷ்யன், தந்தை - குழந்தை தாய்-குழந்தை, கணவன்-மனைவி இடையே அன்பு எனும் உயர்ந்த பாலம் இருக்க வேண்டும். இது இருந்ததால் தான் சீதையை மீட்க ராமர் பாலம் கட்டினார். கடல் தாண்டி சீதையை மீட்க வேண்டும் என்பதில் ராமர் உறுதியாக இருந்தார். இதற்காக பாலம் கட்ட முடிவு செய்தார். இந்த கட்டுமானத்துக்கு அனுமன் உதவி செய்தார்.

உலக அதிசயமான தாஜ்மஹால் இறந்து போன மனைவியின் நினைவாய் ஷாஜகான் கட்டினார். இதை ஒப்பிடும்போது வாழும் மனைவிக்காக ராமர் கட்டிய பாலம் தான் சிறந்தது என நான் கருதுகிறேன்'' என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+