சோனியா என் யோசனையை கேட்கவில்லை... கேட்டிருந்தால் காங்கிரஸ் சரிந்திருக்காது.. பரிதாபபடும் அத்வாலே..!
போபால்: மன்மோகன் சிங்குக்கு பதிலாக சரத்பவாரை பிரதமராக்க வேண்டும் என கடந்த 2004-ம் ஆண்டு சோனியாவுக்கு தாம் அளித்த யோசனையை அவர் ஏற்க மறுத்ததன் விளைவே, இன்று காங்கிரஸ் கட்சி இந்தளவுக்கு பலவீனமடைய காரணம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியிருக்கிறார்.
மேலும், அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் வர முடிகிற போது இந்திய பிரதமராக சோனியா ஏன் வரக்கூடாது என வினவியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து பாஜக கூட்டணியில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயை பொறுத்தவரை மனதில் தோன்றும் கருத்துக்களை ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர். கோ கொரோனா கோ கொரோனா என பாட்டுப்பாடி கொரோனாவை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முயற்சித்தவர். இப்படி பல சிறப்புகளை கொண்ட இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்த கருத்து தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக வர முடிகிற போது, சோனியாகாந்தி ஏன் இந்திய பிரதமராக வரக்கூடாது என வினவியுள்ளார். ராஜீவ்காந்தியின் மனைவி, இந்திய குடியுரிமை பெற்ற நபர், மக்களாக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என பல தகுதிகள் இருந்தும் வெளிநாட்டவர் என்ற எதிர்ப்பால் கடந்த 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார் சோனியா.
இந்நிலையில் இப்போது அது தொடர்பான கருத்தை பதிவு செய்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
மேலும், 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங்கிற்கு பதிலாக சரத்பவாரை பிரதமராக்க வேண்டும் என சோனியாவுக்கு தாம் யோசனை தெரிவித்ததாகவும் ஆனால் அதை அவர் கேட்காமல் மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார் எனவும் தெரிவித்துள்ளார்.
சரத்பவாரை பிரதமராக்கியிருந்தால் காங்கிரஸ் கட்சி இன்று இந்தளவுக்கு சரிவை சந்திருக்காது என்றும் கட்சியை சோனியாவால் காப்பற்ற முடிந்திருக்கும் எனவும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் மேலிடத்துடன் மனக்கசப்பில் இருக்கும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் விரைவில் பாஜகவில் இணையலாம் என்ற தகவலையும் அவர் கூறினார்.
கேப்டன் அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தால் பஞ்சாப்பில் பாஜக ஆட்சியை பிடிப்பதுடன் அம்மாநிலத்தில் வலுப்பெறும் எனவும் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். குடியரசுக் கட்சியின் நிறுவனத் தலைவராக இருக்கும் இவர் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சரவையில் இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications