சிபிஐ இயக்குநர் ராஜினாமா செய்தே ஆக வேண்டும்- பெண்கள் ஆணையம் காட்டம்
டெல்லி: சர்ச்சைக்குரிய பலாத்கார பேச்சுக்கு மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது.. சிபிஐ இயக்குநர் தமது பதவியை ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.
"பலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியாவிட்டால் அதை அனுபவிக்க வேண்டும்" என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித் சின்கா ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்று பெண்கள் அமைப்புகளும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றன.

இந்த நிலையில் தமது கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக ரஞ்சித் சின்கா தெரிவித்திருந்தார். ஆனால் இதை தேசிய பெண்கள் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.
இப்படி பொறுப்பற்ற வகையில் பேசக் கூடிய ஒருவர் சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications