உயர் ஜாதி பெண்ணோடு ஓடிப்போன அண்ணன்.. தங்கைகளை பலாத்காரம் செய்ய பஞ்சாயத்து உத்தரவு
டெல்லி: உத்தரபிரதேசம் மாநிலத்தில் திருமணமான உயர்பிரிவு பெண்ணை தலித் வாலிபர் ஒருவர் கூட்டிக்கொண்டு ஓடியதை தொடர்ந்து, அந்த வாலிபரின் சகோதரிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ய பஞ்சாயத்து உத்தரவிட்டு உள்ளது. .
உத்தரபிரதேசம் மாநிலம் பாக்பாத் மாவட்டத்தை சேர்ந்த தலித் வாலிபர் அப்பகுதியை சேர்ந்த உயர்ஜாதி, ஜாட் இனத்து பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார் கடந்த பிப்ரவரி மாதத்தில், வேறு ஒருவருடன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தனர். உயர்பிரிவு பெண் ஒருவரை காதலித்து வந்து உள்ளார். இதற்கு பெண் வீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை மற்றொருவருக்கு திருமணம் செய்துவைத்து உள்ளனர். ஆனால் அவருடன் வாழபிடிக்காத பெண், காதலித்த வாலிபருடன் வாழவிரும்பி அவருடன் ஓடிச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து வாலிபரின் குடும்பத்தாரை போலீசார் மற்றும் உயர் பிரிவினர் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். அவர்களின் வீட்டை சூறையாடி உள்ளனர்.
இதனையடுத்து கூட்டப்பட்ட கிராம பஞ்சாயத்தில், வாலிபரின் இரண்டு சகோதரிகளையும் பாலியல் பலாத்காரம் செய்து, ஆடை இல்லாமல் கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வரப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பயந்துபோன குடும்பத்தினர், டெல்லிக்கு சென்று உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக பதில் தெரிவிக்கவேண்டும் என்று மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications