கார் விபத்தில் உயிர் தப்பினார் கிரிக்கெட் வீரர் ஜடேஜா !
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா சென்ற கார் விபத்துக்குள்ளானது.
ஜாம்நகர்: குஜராத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் சிக்கி மனைவியுடன் உயிர் தப்பியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா.
இங்கிலாந்துடனான டி20 தொடரிலிருந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஜடேஜா தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஜாம்நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த பீரீத்தி சர்மா என்ற கல்லூரி மாணவியின் ஸ்கூட்டி எதிர்பாராதவிதமாக ஜடேஜாவின் கார் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் சிறு காயம் அடைந்த அந்த மாணவியை ஜடேஜாவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஜடேஜா மற்றும் அவரது மனைவிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications